சுதா மருத்துவமனையின அங்கமான சுதா மகளிர்,குழந்தைகள் நலம் மற்றும் கருத்தரித்தல் மையம், குழந்தையின்மை பிரச்சினைக்கு சிகிச்சையளித்து தீர்வு காண்பதில் மிகவும் பெயர் பெற்ற மருத்துவமனையாகும்.கடந்த 20 வருடங்களாக ஈரோடு மற்றும் கோவையில் வெற்றிகரமாக இயங்கி வரும் இந்த கருத்தரித்தல் மையம் தற்போது சேலம் புதிய பேருந்துநிலையம் எதிரிலுள்ள ஏகா மருத்துவமனை வளாகத்தில் இன்று (25.11.2018) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
சுதா மருத்துவமனை மகளிர் கருத்தரித்தல் மையம் திறப்பு விழா குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் எஸ்.தனபாக்கியம் தலைமையில் நடைபெற்றது. சென்னை ஜி.ஜி.மருத்துவமனை மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் குத்துவிளக்கேற்றி வைத்து சுதா மருத்துவமனை மகளிர் கருத்தரித்தல் மையத்தினைத் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்துள்ள நிலையில் அதற்கான தீர்வு காணும் வகையில் சிகிச்சை முறைகள் உள்ளன.பெண்கள் தாய்மை அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கோடு செயல்படுத்தப்படும் இந்த சிகிச்சை முறைகள் சேவை உள்ளத்துடன் செயல்படுத்த வேண்டும்.ஈரோடு மற்றும் கோவையில் குழந்தை இல்லாத தம்பதிக்கு சிகிச்சையளித்த குழந்தை பேற்றினை உருவாக்கி கொடுத்த சுதா மருத்துவமனை நிர்வாகம் சேலத்திலும் தங்களது சேவையை சிறப்பான முறையில் தொடர வேண்டும்.
அடுத்த 10 வருடங்களுக்குள் எங்கு சென்றாலும், இந்த மருத்துவமனை மூலம் எங்களுக்கு குழந்தை கிடைத்தது என்று சொல்லும் அளவிற்கு, சுதா மருத்துவமனை மகளிர் கருத்தரித்தல் மையம் செயல்பட வேண்டும் என்று கூறினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவர் என்.சஞ்சீவ ரெட்டி பேசும்போது, குழந்தையின்மை சிகிச்சைக்காக பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.அதிக பட்ச செலவு ஏற்படும் என்ற தவறான எண்ணத்தை பொதுமக்கள் கைவிட வேண்டும்.கருவிகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
மருத்துவர்களுக்கான சிகிச்சை கட்டணம் குறைவாகவே பெறப்படுகிறது.சோதனைக் குழாய் மூலம் குழந்தைப் பேறு என்பது இறுதிக்கட்ட வாய்ப்பாகும். அதற்கு முன்பாக மருந்து மாத்திரைகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.ஈரோடு மற்றும் கோவையில் சிறந்த முறையில் குழந்தையின்மைக்காக சிகிச்சையளித்து வரும் சுதா மருத்துவமனை சேலத்திலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என்று கூறினார். நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்துப் பேசிய சுதா மருத்துவமனை மகளிர் கருத்தரித்தல் மைய மருத்துவர் எஸ்.தனபாக்கியம் குழந்தையின்மை சிகிச்சையளிப்பதில் சிறந்து விளங்கும் மருத்துவர் கமலா செல்வரா[ஜ் அவர்களை முன்மாதிரியாக கொண்டு, இத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது. ஈரோட்டில் 20 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சுதா மருத்துவமனை மூலம் அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் குடும்பங்களில் குழந்தை பேறின்மை என்ற நிலையை இல்லாமல் செய்துள்ளோம்.
பொதுவாக குழந்தையின்மைக்கு சிகிச்சையளிப்பதில் நூற்றுக்கு 45 சதவீதம் வெற்றி என்பது இந்திய சராசரியாக உள்ளது. ஆனால், சுதா மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் நூற்றுக்கு 80 சதவீதம் வெற்றி பெற்று குழந்தைப் பேறு கிடைத்துள்ளது.கிருஷ்ணகிரி,தருமபுரி மற்றும் சேலம் மாவட்ட உட்பகுதிகளில் வாழும் மக்கள் தரமான,நம்பகமான குழந்தையின்மை சிகிச்சைகளுக்கு ஈரோடு சுதா மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தவர்கள்,தற்போது சேலத்திலேயே அதே தரமான குழந்தையின்மைக்கான சிகிச்சை கிடைக்கும் வசதி ஏற்பட்டுள்ளதால் பயணம் மற்றும் அதிக நேரம் போன்ற சிரமங்களில் இருந்து அவர்களுக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது.
உலகத் தரம் வாய்ந்த ஐ.வி.எப் லேப், அனுபவம் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவக்குழுவின் மூலம் ஐ.வி.எப் சிகிச்சையில் அதிக வெற்றியைத் தரும்.நீண்ட வருடமாக குழந்தையில்லாத தம்பதிக்கு, குழந்தையின்மைக்கான சிகிச்சையளித்த பின்னர், அவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைத்து அவர்கள் அடையும் மகிழ்ச்சியே எங்களுக்கான மன திருப்தியாக உள்ளது.விரைவில் சுதா மருத்துவமனை மற்றும் மகளிர் கருத்தரித்தல் மையத்தினை சென்னையில் தொடங்க வேண்டும் என்று அவர் கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சுதா மருத்துவமனை மற்றும் மகளிர் கருத்தரித்தல் மைய மருத்துவர் எஸ்.பிரதீபா, மருத்துவர் சுதாகர்,மருத்துவர் கந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் நந்தகுமார் மற்றும் பிரதீப், எஸ்.கே.எம் முட்டை நிறுவனத்தின் இயக்குநர் சிவக்குமார் மற்றும் குமுதவல்லி, பரணி பட்டு சென்டர் நிர்வாக இயக்குனர் சத்யா சரண் மோத்தி ரெடிமேட் நிர்வாக இயக்குநர் செந்தில் செல்வா,சாரிட்டபிள் டிரஸ்ட் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
CFCM News
(Centre for Community Media)