June 21
கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசுப் பள்ளியில் உலக யோகா தினமும் அதனைத்தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணியும் நடைபெற்றது.
உலக யோகா தினம் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை ஆசிரியைகள் கல்பனா,ஜெயமணி, தமிழ் செல்வி மாணவர்களிடம் எடுத்துக் கூறி பேசினார்கள்.பின்னர் மாணவர்கள் சேர்க்கை மற்றும் யோகா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியில் பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் ஜெயந்தி,மற்றும் மீனாம்பிகா,கீதா சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு கிரீடம், மாலையணிவித்து பாராட்டப்பட்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.சத்துணவு அமைப்பாளர் பழனியம்மாள் நன்றி கூறினார்.
CFCM News
(Centre for Community Media)