May 15
சேலம் அரசினர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் திரு.T.கார்த்தி மற்றும் திரு.G ஜெயராமன் ஆகியோர் தமிழ் நாட்டிலேயே முதல்முறையாக சேலம் மாநகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக police feedback system என்ற சாப்ட்வேரை உருவாக்கி கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் காவல் நிலையங்களில் பெறப்படும் புகார் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள், என மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும். மேலும் இந்த police feedback system மூலமாக மாநகரில் இதுவரை 6300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,
இந்த சாப்ட்வேர் உருவாக்கிக் கொடுத்த மாணவர்களுக்கு 15.5.19ஆம் தேதி சேலம் மாநகர *காவல் ஆணையாளர் திரு.K.சங்கர்.IPS* அவர்கள் பாராட்டு சான்று வழங்கி கௌரவித்துள்ளார். மாணவர்களின் இந்த முயற்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
CFCM News
(Centre for Community Media)