April 27
தமிழகத்திலும் வெடிகுண்டு சம்பவம் நடைபெறப் போவதாக மர்ம நபர் தொலைபேசியில் அளித்த தகவலை தொடர்ந்து சேலத்தில் பரபரப்பு. ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தொடர் சோதனை கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் தேவாலயங்களில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றது.
இதனால் 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் திறந்து இலங்கையில் பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தமிழகத்திலும் வெடிகுண்டு சம்பவம் நடைபெற போவதாகவும் இந்த வெடிகுண்டு சம்பவத்தை அரங்கேற்ற ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் தங்கியிருப்பதாகவும் மர்ம நபர் ஒருவர் பெங்களூரு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூர் காவல் நிலையம் தமிழகத்திற்கு முன்னெச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி உள்ளது.
அதன் அடிப்படையில் ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினரும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர. இந்த நிலையில் சேலத்திலும் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை மற்றும் வெடிகுண்டு பொருட்கள் உள்ளதா என்பது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் குழு மற்றும் இரண்டு மோப்ப நாய்களுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து பகிர்ந்து சோதனை நடைபெற்ற நிலையில் சேலம் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பெட்டிகள் மற்றும் பயணிகளின் உடமைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஜங்ஷன் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள விடுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது மேலும் சேலத்தில் உள்ள முக்கிய பகுதிகள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவற்றுக்கு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் அதிக அளவில் காவல்துறையினரால் பணியில் அமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் தமிழகத்திற்கு வெடிகுண்டு சம்பவம் நடைபெறப் போவதாகவும் ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் தங்கி இருப்பதாகவும் தொலைபேசி மூலம் தெரிவித்த நபரின் தொலைபேசியை ஆய்வு செய்தபோது அவர் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது அவர் சுவாமி சுந்தரமூர்த்தி என்பதும் அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் தற்போது ஓய்வு பெற்று லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிய வந்தது மேலும் கார்கில் போரின் போது அவர் பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது மேலும் இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பதும் தெரியவந்தது.
CFCM News
(Centre for Community Media)