X Close
X
8825830932

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது : மாவட்ட ஆட்சியர் ரோகிணி பேட்டி-


87108-0b25a433-6012
Salem:

April 19

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளுக்கும் பாண்டிச்சேரி ஒரு தொகுதி என 39 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட அனைத்து இயந்திரங்களும் சில் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் அடிப்படையில் சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் சில் செய்யப்பட்டு பாதுகாப்பாக வாக்கும் எண்ணும் மையமான சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு அதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டது தேர்தல் மேலிட பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி வேட்பாளர்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

இதேபோல் 6 சட்டமன்ற தொகுதிகளில் உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரியான ரோகிணி கூறும்போது சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குபெட்டிகள் அனைத்தும் சட்டமன்றம் வாரியாக வைக்கப்பட்டு அனைவர் முன்னிலையிலும் சீல் வைக்கப்பட்டது என்றும் இந்த அறைகளுக்கு துணை ராணுவப் படை ஆயுதமேந்திய மத்திய காவல் படை மற்றும் தமிழ்நாடு காவல்துறை என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையினை அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் எப்போது வேண்டுமானாலும் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் எந்தவித இடையூறுக்கும் அசம்பாவிதங்களும் இடம் கொடுக்காத வகையில் பாதுகாப்பாக மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

CFCM News

(Centre for Community Media)

CFCM