சேலம் மாவட்ட கருவூல அலுவலர் திரு.ஹெச். மூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் இச்சூழ்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் சேலம் மாவட்ட கருவூல அலுவலகம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள சார் கருவூல அலுவலகங்கள் அனைத்தும் அரசுத் துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சம்பளம் வழங்குவதற்காகவும் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கும் 100 சதவிகித பணியாளர்களுடன் தொடர்ந்து இயங்கி வருகின்றது.
அரசு பணியாளர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மாதந்தோறும் தடையின்றி வழங்குவதற்காக கருவூல பணியாளர்கள் அனைவரும் வருகைதந்து பணியாற்றி வருகின்றனர். எனவே, ஆகஸ்ட் 2020 மாதத்திற்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் எவ்வித தடையும் இன்றி கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு சேலம் மாவட்ட கருவூல அலுவலர் திரு.ஹெச். மூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார். ஒம்/- ஹெச். மூர்த்தி,